Wednesday 12 October 2016

ஆள்தல் நம்பிக்கையாக

என் 
கவலைகளை காது கொடுத்து 
வளர்த்துவிட்டதில்லை
வருத்தங்கள் கிளறி 
ஆறுதலணைத்ததுமில்லை
சோகங்கள் இமைவடிக்க
இழுத்தணைத்து 
இன்னும் கூட்டுவதில்லை

துயர்கள் மீளும்
தனிமை தாரமல்

தோளருகில்
உடனிருக்கிறாய்

தேவைப்பொழுதில்
#ஆள்தல் நம்பிக்கையாக

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..