Tuesday 11 October 2016

அவளும் பறக்கிறாள்




இரைகளுக்காக அவைகள் 
வருகிறதென்றே
இத்தனை நாள் நினைத்திருந்தாள்
தானியக்கிண்ணம் மறந்து சென்ற போதும்
இறகடித்து வந்தமர்ந்தன
கொத்தும் அலகால் கோதி சிறகமர்த்தி
சிலுப்பி தலையாட்டி
சின்ன நடை நடந்து
பக் பக் என பந்தமாடின
எப்போதும் போல்

கறுப்பி ....நெட்டைதிமிர்
சவலை ... மணிக்குட்டி ...ராசாத்தி 
பெயரிட்டு.........
இப்போதெல்லாம் அவளும்
பறக்கிறாள்
அவைகளுடன்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..