Monday 17 October 2016

மனசுக்கு ஏதுடா வயசு


கீழே விழுந்திடாதே
மெல்ல நட
ஏனிந்த வேலையுனக்கு.
சும்மாயிரு
சொன்னத கேட்காம
எதையும் இழுத்து வைச்சுகாத
எரிச்சலோடு 
குறைபடும் சொந்தங்களை 

அடேய் மேதாவி கிறுக்குகளா....
மனசுக்கு ஏதுடா வயசு....
தெம்பிருக்கும் வரை
கிடை அடைஞ்சது சாகுமா

சுருங்கும் விழி பார்வையில்
சூட்சமாம சொல்லி நகர்றா
சூதான அப்பத்தா

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..