Monday 17 October 2016

அறி விண்கலமொன்று அவனியிறங்கிய நாள்

அக்னி சிறகு விரித்து 
அறி விண்கலமொன்று
அவனியிறங்கிய நாள் 

எளிமை சுடரே
எழுச்சி வழியே 
தன்னம்பிக்கை நாட்காட்டியே
தன்னலமற்ற தவப்புதல்வனே
அன்பாலும் அரவணைப்பாலும்
உலக உயிர் புதுப்பித்து
புதுவழி காட்டும் நம்பிக்கை ஆசானே

நீ வாழ்ந்த காலத்தில் 
வாழ்ந்தோம் நாங்களென்பது
வாழ்நாள் பெருமை எங்களுக்கு

வாழ்தல் தேடும் உயிர்களுக்கு
இருப்பிட உயர்விடமாய்
நீர்நிலைக் கோளமாய்
என்றும் நீர் 
ஈரம் கோர்த்து 
வியப்பித்திருக்கிறாய்
விண்வெளியுல்...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..