Monday 17 October 2016

வாழ்த்து


எளிமை மனமாய்

இனிமை குணமாய்
வளமை பிரியமாய்

அன்புத் தங்கை சுந்தரியின் Sundari Manalan
ஆருயிர் நேசமாய்

ஆனந்த மகிழேந்தும்
அன்புத் தம்பிக்கு ValliManalan Kadayanallur
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

அக்கா என அன்புக் கரமிணைத்து
உயிராடியவள்
உரிமையுடன் அறிமுகம் செய்ய
அன்றிலிருந்து இன்று வரை
இயல்புதாங்கிய சிரிப்புடன்
உயர்வெழும்பிய குணங்களுடன்
பிரியமாடும் தாங்கள் 
மண்ணுலகில் என் தங்கைக்கு கிடைத்த வரம்
சந்தித்த நாளில்
தினம் பிரியம் பரிமாறும் நாங்கள்
பற்றிய விரல் விடாமல் பேசிக் கொண்டிருக்க
அதே அன்புடன் உடன்பிறப்பாய்
நீங்களும் கதிரும் பேசி அளவாடியது
என்றும் ஆச்சரியமே

வளர்ந்தும் குழந்தையாக
தன்னை தான் பேணாது
தியாக அன்பிம்சை தரும்
எங்கள் சுந்தரி தங்களுக்கு முதல் மழலையே
அவளுக்கு நீங்கள் வர வாழ்வின்பமே

இன்றணைக்கும் இன்பமும் நிம்மதியும்
என்றுமணைத்து
அன்பு குலச்செல்வன் ஆகாஷ் உடனும்
ஆதர்ச மனைவி சுந்தரியுடனும்
இன்பப் பெருவாழ்வு வாழ

இனிய வாழ்த்துகள் தம்பி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..