Monday 17 October 2016

பாச நதி


உற்று உன் முகம் பார்க்க 
ஒரு போதும் 
ஆவல்பட்டதில்லை
அருகமர்ந்து பேசி சிரிக்க
ஆயத்தபட்டதுமில்லை
மாதம் ஓரிரு முறை வரும்
அலைபேசியோ
வாரந்தவறாது வரும்
தனித் தகவலோ
தாளா பாச நதியென
வனப் பெருக்கெடுக்க
சுவடழித்து சென்ற காலச்சூறாவளியில்
கழன்று சுழல கற்றுக்கொண்டோம் 
ஏகோர் அருகிருந்தும்
எவருமில்லாதவராய்

இன்றும் என்றும்
ஆங்கோர் அமைதியில்
நினைநரம்பு சுண்டிவிட.....
தினம் பலகுரல் மோதும் 
செவிப்பறையுள் 
ஆயுளிருக்கும்

இயல்பேச்சிடையே நீ
இழுக்கும் 
#கேலி ராகம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..