Thursday 13 October 2016

உடுக்கை இழந்தான்

காப்பிப்பொடி தேடும் முன் 
பால் பொங்கி தீய்ந்தது
தோசை, கல்லோடு ஒட்டி 
வர மறுத்தது
குக்கரில் விசில் வராமல்
தண்ணீர் வெளியேறி
சாதம் அடிப்பிடிக்க
வாஷிங்மிசினும் நுரையோடு
அடம் பிடித்தது

காய்நறுக்கி கீறி
கை சுட்டு அவஸ்தைப்பட்டு
ஆயிரத்து ஓராவது முறையாக
எரிச்சலோடு திட்டி ஓய்ந்தான்

இத்தனைக்கும் காரணமான
அம்மாவீட்டிற்கு போயிருக்கும்
மனைவியை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..