Thursday, 11 June 2015


கவுரவ சத்தியங்கள்

அப்பாவிடம்
அம்மாவிடம்
உடன்பிறப்புகளிடம்
உடன் நட்புகளிடம்
உடன் வரும் இணையிடம்

முக்கியமாக
குழந்தைகளிடம்

உடைந்தேகிடக்கிறது

சாத்தியமில்லா விஷயங்களுக்கு
கொடுக்கப்படும்

கவுரவ சத்தியங்கள்

நால் விழிகள்

இடித்து தோள்
சாயடி

ஒரே கனவை
கண்டுரசிக்கட்டும்

நாள் முமுவதும்....நம்

நால் விழிகள்

நட்டுவகாலி மனம்.!!!!

தொட்டால் மரணமெனினும்
தொட்டு சாக துடிக்கிறதடி

உன்அழகு அமுத
கொடுக்குசிக்கும்

நட்டுவகாலி மனம்.!!!!

புஷ்பாஞ்சலி



சங்கடங்கள் விலக்கும்

சன்னிதான பிரியத்திற்கு

செண்பகப் பூக்கள் சமர்ப்பணம்

குழப்பங்கள் விலக்கும்
குணம்நிறை மாதாவிற்கு
ரோஜாபூக்கள் சமர்ப்பணம்

தெளிவுகள் தரும் தேவபிரியத்திற்கு
மல்லிகை மலர்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ.!!!

அதீத உரிமையாய்

அமைதி ஒதுங்குதலை

அதீத உரிமையாய்
எடுத்துக் கொண்டு

உறங்கும் சிங்கத்தை
சுரண்டும் ஜந்துக்கள்

உயிர் நோக...கடித்து
குதறினால் தான்

மரண பய ....மன்னிப்பு கோரலுடன்

தன் வழி போகுமோ...???