Sunday, 3 May 2015

ஆயிரம் பிறைகண்ட ஆனந்தபெருவாழ்வு


அன்னையின் பிரியமாய்
ஆயுள் தவ சொந்தமாய்
அல்லிப்பூ மணமாய்
ஆதவசுடர் வெளிச்சமாய்

இனிக்கும் சக்கரை வாழ்வின்
இணைசேர்ந்த உயிர்நாளாய்

இன்ப மணநாள் காணும்
நல் நட்பின் தோழமைக்கு Jagadish Kumar

இனிய வாழ்த்துக்கள்

சொந்தங்கள் சூழ சொல்வன்னோர் வாழ்த்த
பாச கிளைத்தலுடன் பவித்ர சொந்தமாடி
ஆண்டு பதினாலு கண்டு..அன்றில் பறவை நேசத்துடன்

ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என
வாழைகுருத்து வம்சம் கண்டு
வசந்தமாடும் வானவில் பிரிய ஜோடிகளே

ஜெக வெற்றியாடும் சவால்களுடன் அனைவரையும் அணைத்து ஆலம் விழுதாய் குடும்பவேர் தாங்கும்
எங்கள் தோழனை..
கனிவாடி கரம்பிடித்து கருத்திணைந்த குணமகளே
நித்திய நிம்மதி தங்கும் நிர்மல நேசமே

மணமாடி உயிராடி
மங்கல உயிர்பிரியமாடி
மகிழ்வு நேசகூடு கட்டி..இன்னிசை ஸ்வரலயமாய்
மதனோற்சவ வாழ்வு வாழும் தாங்கள்

இன்றுபோல் என்றும் இளமைஅன்பாடி
இன்பதிருவாழ்வு வாழ

நாம் வணங்கும் அன்னை வணங்கி

வான்நிறை நட்சத்திர பூக்களெடுத்து
மலர்கொத்து தொடுத்து கொடுத்து

வாழ்த்துக்கிறேன்.....

வாழ்க வாழ்க நீங்கள்.....
ஆயிரம் பிறைகண்ட ஆனந்தபெருவாழ்வு

இனிய வாழ்த்துக்கள் பாஸ்..

புஷ்பாஞ்சலி


மனநிறைமகிழ்வுதரும் வெற்றி முன்னேற்றத்திற்கு
மஞ்சள் சாமந்தி மலர்கள் சமர்ப்பணம்

ஆளுமை சக்தியாய் வரும் ஆழ்தவ ஆனந்தத்திற்கு
இளம்சிவப்பு தாமரை மலர்கள் சமர்ப்பணம்

மணநிறை மணவாழ்வு தந்து சொந்தம் சூழ
நிம்மதியளிக்கும் சுகந்த பிரிய தேவமைகளுக்கு
மயிலிறகு மலர்கள் நன்றி சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே...ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!!!!!!!!!!!!

போதை விழிகள்






பேச வந்த மொழிகளை
எப்போதும்
தட்டிப் பறிக்கிறதடி

பேதை உன்
போதை விழிகள்

முத்த வாழ்த்துக்கள்....டா ..குட்டிமா


அன்பு மகளுக்கு.......... Lachumi Selvaraja
ஆயுள்நிறை செல்வத்துக்கு

ஆனந்த பிரியைக்கு
அம்மா என்றழைத்து

கழுத்து கட்டி கனிவாடும்
கவி குழந்தைக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....

தாயென நீ அழைக்கும் போதெல்லாம்
தன்னிறைவாய் என்னில்
உள் சிலிர்க்கும் உயிர்கூடு

சொல்லும் மொழியும் கொஞ்சும்
என் செல்லமகள் கவி தொடுத்தால்

தைரியமும் துணிச்சலும் தளும்பிவழியும்
உன் குறும்புக் கோபங்களில்

ஆயிரம் மைல் அப்பால் இருந்து..அன்று நீ
அம்மா என்றழைத்த குரலையும் சிரிப்பையும்
சிந்தாமல் சிதறாமல் சேமித்து வைத்துள்ளேனடி
என் உணர்வுச் செவிகளில்

என் தம்பியவனை மாமா என்று அழைத்து
அவன் சொல்ல நான் உனக்கு அம்மாவாகி
நீ மடி கொஞ்சிய நேசக்கூடு....

முதலாய் நான் முகநூல் வந்த பாசக் கூட்டின்
தாய்மைவீட்டு காலங்கள்

எட்ட இருந்தே என்னை கட்டிக் கொஞ்சும் கருமகளே

மண்ணில் நான் பெண்ணாய் பிறக்கும் ஜென்மம்தோறும்
நீயே என் மகளாய் கருப்பைநிறைய

அன்னையிடம் ஆயுள்தவமிருக்கிறேன் தங்கமே

பொன்னாய்வந்த என் மகள் போற்றிபுகழ்பாட என்றும் நின்றுவாழும் நிலமாய் வாழ்வாள்,,,என்றே பெருமிதகசிவுடன்
கட்டியணைத்து உச்சிமுகர்கிறேன்

வாழியடி மகளே வசந்தபெருவாழ்வு

முத்த வாழ்த்துக்கள்....டா ..குட்டிமா

நிறை கொலுசொலி...

இருந்திருந்தால்.....
நடந்திருப்பாள் ..என

பழாகாமல் பழசாகாமல்
பட்டுப் போன
பரிதவிப்பு தாய்மையின்

உணர்வுக்காதுக்குள் ஒலித்துக்
கொண்டே இருக்கும் !!!!)

கருவில்வளர்ந்து
கையில் தங்காமல்
போன மகளின்

நிறை கொலுசொலி...