Tuesday, 19 May 2015

பேதை..போதை வளை கை

விரல் முத்தம்
தா

விரதம் கலைந்து
தள்ளாடட்டும்

பேதை..போதை
வளை கை

சாதனை ...மனிதவிழுது


சோதனை நிலம்
கரம் இறுக்கும் போதெல்லாம்

வீறு கொண்டே
வெற்றி வித்திலை எழும்

சாதனை ...மனிதவிழுது

தீ முத்தம்

தீ முத்தம்
தின்னக் கேட்டே...

திமிர்
தினவெடுக்கிறது

விடாது கொட்டும்
மழை பந்தாடும்

மதன்கன்னி நேசம் !!!

புஷ்பாஞ்சலி

வழியாய் வந்துஒளிகாட்டிய
வசந்த அன்னையே பலவண்ணரோஜா மலர்கள் சமர்ப்பணம்

தைரிய நம்பிக்கையளித்து
தன்னம்பிக்கை மனநலம் தரும்
தனித்துவ அன்னைக்கு எருக்கம் மலர்கள் சமர்ப்பணம்

நிம்மதிசூழ் நிறைவாய் நிறைந்து
நல்வாழ்வு தரும் நன்மையின் தேவிக்கு மல்லிகை மலர்கள் சமர்ப்பணம்...

அம்மா என்றழைக்க ....உடன் ஓடிவந்து கருணையணைத்து பலபாதை தரும் ஒருவழி நேர்மையே........

என் நின்மலரடி ஆனந்த சரணம் அம்மா

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே !!!!!!!

தாய்மை இரவுகள்..

சந்தோச நம்பிக்கை
சிரிக்கிறாய்..

நிம்மதியுறங்குது

நீர்மையாடும்
என் தாய்மை இரவுகள்..!!!!

சுவாசவிழி நேசம்.

வெறுக்கும் நீ

இறக்கும் நான்...

இடு காட்டு ஆவியலைவில்
இளைபாறுது

சுவாசவிழி நேசம்...!"

மீண்டும் மீளா.. களப்பலி காண..

விதைத்தவன்
விதையெழுந்தவன்
விதையானவன்

விதைந்தான்

உண்டு ருசிக்கும் முன்
அறுவடை களத்திலேயே

தின்று செமித்த
தரித்தரமே

சரித்திரங்களுக்குஎன்றும் சாவில்லை....

உயிர்த்தெழுவான்
ஈழ தேவன்.....

அகதி அகதியென
மார்அடித்து கதறும்
தாய்மை கருப்பை எங்கும்

உரு சேரும்......அணுத்துகளாய்

ஒளியேந்தி வருவான்
புலிக் கொடி புத்தமகன்

ஓலமேந்தி ஒப்பாரி
வைக்க கூட....
ஒரு துகளின்றி ....
உமைச் சூறையாடா....

காத்திரு சிங்களமே
எம் கரிகால சோழனிடம்

மீண்டும் மீளா..
களப்பலி காண...