Thursday, 26 March 2015

முக அணைவு


சோகத்திலும்
சுகத்திலும்

உதிரியின்றி நான்
முழுமையாக

வேண்டுமடி
எனக்கு

உன்
தலைமுட்டிய
முக அணைவு

என் கவிதையன்னையே..!!!!

கொஞ்சி சிணுங்கி
அதட்டி மிரட்டி
அழுது சிரித்து
வாசித்து சுவாசித்து

பிள்ளையென உன்னை பிரசவித்து
பிள்ளையாய் உன்னில் கர்ப்பம் கண்டு

உன் மடியிலேயே
கைகால் முடக்கி
கனவுதுயில் காண்கிறதம்மா

என்..வரமேந்திய
இப்பூமி பிறவி

என் கவிதையன்னையே..!!!!

ஊமைக் கோழை




உனக்கு தெரியுமா...தெரியாது
நான் எப்போதும்
உன் தோள் வளைவு சாய்ந்தே
பேசிக் கொண்டிருக்கிறேன்

உனக்குத் தெரியுமா....தெரியாது
உன் பிரிவில் நான்
அழுது துடித்திருக்கிறேன்

உனக்குத் தெரியுமா...தெரியாது
உன்னுடன் நிறைய
செல்லச் சண்டையிட்டுருக்கிறேன்

உனக்குத் தெரியுமா...உன்னை??
தெரியாது

ஆனால்
எனக்குத் தெரியும்
உன் தேவை எதுவென்று..????

ம்ம்ஹூம்ம்...
உன்னைப் பார்த்த பின் தான்
முதலாய்
சிணுங்கி தெரிந்துகொண்டேன்

எத்தனை தைரியசாலியையும்
நேசம்
ஊமைக் கோழையாக்குமென்று
ஆதாயமில்லா
ஆயுள் நேசம் .....அம்மா

ஓசோனை ஓட்டையாக்கும் எமன்

ஓசோனை ஓட்டையாக்கும்
எமன்

உற்பத்தி தொழிற்சாலையின்
புகை போக்கி