Friday, 24 April 2015

புஷ்பாஞ்சலி

மணம் சூல் நிம்மதியாய் சூழும்
மகத்துவங்களுக்கு செண்பக பூக்கள் சமர்ப்பணம்

அமைதிநிறை ஆனந்தமளிக்கும்
அன்பு வேதங்களுக்கு சாமந்தி மலர்கள் சமர்ப்பணம்

ஏற்றம் தரும் வாழ்வளிக்கும்
ஏகாந்த பிரியங்களுக்கு செம்பருத்தி மலர்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!




Saturday, 18 April 2015

அன்புகொஞ்சும் தேவதை பிரியத்திற்கு



அறிவின் கலைமகளாய்
அழகின் திருமகளாய்
ஆற்றல் நிறை மலைமகளாய்

அவனிவந்த முப்பெரும் தேவி
ஒருங்கிணைந்த அவதார பிறப்பிற்கு

அன்புகொஞ்சும் தேவதை பிரியத்திற்கு
என் செல்ல லதா குட்டிக்கு Latha Swaathi

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எடுத்தசெயலில்....முடிக்கும் சிந்தையில்
கவனிக்கும் தெளிவில்...நேர்மையானவள்

அன்புகொஞ்சும் பிரியத்தில்
அணைத்து காக்கும் பாசத்தில்
நேசிக்கும் ஏகாந்தத்தில்.....தாய்மையானவள்

தோளணைக்கும் தீரத்தில்
மனோபல தைரியத்தில்
எவரையும் அஞ்சாமல் எதிர்க்கும் துணிச்சலில்
நான் விரும்பி நேசிக்கும் வீரமானவள்

நேர்மையானவள்..வீரமானவள்..தாய்மையானவள்
என் பாரதி கண்ட இத் திமிர்மகள்

பெண்மை நளின வெட்கங்கள் வேரூன்றி
அயல்நாட்டிலும் எம் தமிழச்சி அடையாளமாய் வாழ்பவள்

பார்க்க பார்க்க பவிதரம் கொஞ்சும் அழகியானவள்
என்னின் உயிர் நேசிப்பு தோழமையானவள்

எல்லோரிடமும் சகோதரதுவம் கொஞ்சும் பிரியமானவள்

அன்னையின் அருள்துளி என்னில் என்றால்
இவளை நான் கண்டு கைகோர்த்து இமையணைத்தது தான்
தோழி என தோள்சாய்த்தலில் உருகி உதிரும்
இவளில் என் கவலைகள்...
மருத்துவரான எனக்கே மனவளகலை கற்றுத்தரும்
இவள் தம் அன்புநம்பிக்கைகள்

எழுத எழுத மொழி நெகிழ்கிறதடி உனை அணைக்கும்
என் பாசநேசிப்புகள்

அன்னைக்கு ஆனந்தகோடி நன்றிகள்..உன்னை என் கண்ணில் காட்டியமைக்கு
வாழவேண்டுமடி என் வாச பூமகளே
மண்ணில் நானிருக்கும் காலமும் என் ஆயுளும் சேர்த்து நீ என்றும் என்றென்றும் இன்பச் சாரலாய் ...
நிம்மதி மகிழ்வு பூச் சூடி

வாழ்த்துகிறேன் உயிர் நிறைபூக்களை அட்சதை தூவி

வாழ்க வாழ்க வாழிய நீ பல்லாண்டு தோழி...

உண்மைத் திருவே



உண்மைத் திருவே
உவமை தருவே
உற்சாகம் தருபவளே
உயிரோட்டம் காப்பவளே
உவகைதரும் கனிவே

உத்தம தவபயனே...என்றும்
உன்பாதம் சரணம் சரணம் பரிபூரணசரணம் பவித்ரமே..!!!

ஓம்நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!!!