Tuesday, 26 May 2015
அக்கா எனும் அன்னையே
அன்பின் உருவமாய்
ஆலயத் திரு வடிவமாய்
அமுத மொழிகள் கொஞ்சி
ஆனந்த பிரியமேந்தி
அழகு செழித்த களைமுகமே
அக்கா எனும் அன்னையே Malar Madeshwaran
ஆண்டுகள் பலதவமிருந்தேனா
உங்கள் தங்கையென இங்கு உமை உவமையாட....
செந்தாழம் பூக்களும்
செங்கனி சுவைகளும்
தன் மண தித்திப்பு தோற்கும்
தங்கள் குரலினிமை முன்
கானமயிலும் தோகை விரித்து சிலிர்தாடும்
உங்கள் மழைப் பாசம் கண்டு......
செல் எல்லாம் பிரியமாய்
அணுவெல்லாம் ஆனந்தமாய்...
கண்காணும் உருவங்களில்
எல்லாம் நிறை மட்டுமே கண்டு...உறவு தோழமை பிரியமாடி உயிரணைக்க
உங்களால் மட்டுமே முடியும் அக்கா.....
எல்லோரையும் நல்லவராய்
காணும் மகாபாரத மா தவ
மன்னவன் தர்மனின் ...
பெண்மை பிறவியாய்
மண் வந்த தாய்மை நீங்கள்...
ஓடோடி வந்தேன் அக்காவை பார்க்க.....
ஓடி வந்து ...கைபிடிக்கவில்லை
கழுத்தணைத்தார்...அந்த நொடி.அந்த ஈர அணைவில்
அன்னையடி நான் உனக்கு என்றே நெஞ்சம் நெகிழ்த்தினார்
பொன்மன மாமாவுடனும்
பொக்கிஷ குழந்தைகளுடனும்
வாழவேண்டும் அக்காஎன் ஆயுள் சேர்த்து நீங்கள்
ஆயிரம் பிறை காண்
அன்பு பெருவாழ்வு.....
ஆனந்த கண்ணீர் மலரை
அன்னை பாதமிட்டு சமர்ப்பித்து...
மனம் நிறைமணம் சூடி வாழ்த்துகிறேன்
வாழிய வாழிய வாழிய
பல்லாண்டு..பல்லாண்டு
ஆலயத் திரு வடிவமாய்
அமுத மொழிகள் கொஞ்சி
ஆனந்த பிரியமேந்தி
அழகு செழித்த களைமுகமே
அக்கா எனும் அன்னையே Malar Madeshwaran
ஆண்டுகள் பலதவமிருந்தேனா
உங்கள் தங்கையென இங்கு உமை உவமையாட....
செந்தாழம் பூக்களும்
செங்கனி சுவைகளும்
தன் மண தித்திப்பு தோற்கும்
தங்கள் குரலினிமை முன்
கானமயிலும் தோகை விரித்து சிலிர்தாடும்
உங்கள் மழைப் பாசம் கண்டு......
செல் எல்லாம் பிரியமாய்
அணுவெல்லாம் ஆனந்தமாய்...
கண்காணும் உருவங்களில்
எல்லாம் நிறை மட்டுமே கண்டு...உறவு தோழமை பிரியமாடி உயிரணைக்க
உங்களால் மட்டுமே முடியும் அக்கா.....
எல்லோரையும் நல்லவராய்
காணும் மகாபாரத மா தவ
மன்னவன் தர்மனின் ...
பெண்மை பிறவியாய்
மண் வந்த தாய்மை நீங்கள்...
ஓடோடி வந்தேன் அக்காவை பார்க்க.....
ஓடி வந்து ...கைபிடிக்கவில்லை
கழுத்தணைத்தார்...அந்த நொடி.அந்த ஈர அணைவில்
அன்னையடி நான் உனக்கு என்றே நெஞ்சம் நெகிழ்த்தினார்
பொன்மன மாமாவுடனும்
பொக்கிஷ குழந்தைகளுடனும்
வாழவேண்டும் அக்காஎன் ஆயுள் சேர்த்து நீங்கள்
ஆயிரம் பிறை காண்
அன்பு பெருவாழ்வு.....
ஆனந்த கண்ணீர் மலரை
அன்னை பாதமிட்டு சமர்ப்பித்து...
மனம் நிறைமணம் சூடி வாழ்த்துகிறேன்
வாழிய வாழிய வாழிய
பல்லாண்டு..பல்லாண்டு
விழி வழி ஒளிகாட்டியே சரணம்
விழி வழி ஒளிகாட்டியே சரணம்
வழிதரும் வாழ்வே சரணம்
மகிழ்வணைக்கும் மரகதமே சரணம்
செம்மை பாதை காட்டும்
செழுமையே சரணம்
அம்மா என அழைத்தவுடன் வந்து அணைத்துக் காத்தவளே சரணம்
நிம்மதி தந்தவளே நன்றி
நிகழ்வாய் உடன் வருபவளே நன்றி
எல்லாம் வல்ல இறையே
என் அன்னை ஆனந்தமே
கதியென சரணடைந்து கதறிய மனம் காத்து நம்பிக்கையளித்தவளே...நல்வழிதந்த என் தாய்மையே..
சரணம் சரணம் கண்ணீர்மல்க நன்றி சமர்ப்பணம்..அம்மா.!!!
ஓம் மாத்ரேய நமஹ.. ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!!!!
வழிதரும் வாழ்வே சரணம்
மகிழ்வணைக்கும் மரகதமே சரணம்
செம்மை பாதை காட்டும்
செழுமையே சரணம்
அம்மா என அழைத்தவுடன் வந்து அணைத்துக் காத்தவளே சரணம்
நிம்மதி தந்தவளே நன்றி
நிகழ்வாய் உடன் வருபவளே நன்றி
எல்லாம் வல்ல இறையே
என் அன்னை ஆனந்தமே
கதியென சரணடைந்து கதறிய மனம் காத்து நம்பிக்கையளித்தவளே...நல்வழிதந்த என் தாய்மையே..
சரணம் சரணம் கண்ணீர்மல்க நன்றி சமர்ப்பணம்..அம்மா.!!!
ஓம் மாத்ரேய நமஹ.. ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!!!!
Tuesday, 19 May 2015
Subscribe to:
Posts (Atom)






