Friday, 24 April 2015


மழை பொய்த்த மண்ணில்

குளம் நிரம்பிய நீர்
குளு குளு தென்றல்

இருபக்க பசுமையுடன்
ஒற்றையடி பாதை

ஈரமான மக்கள்

எல்லாம்
கிராம அடையாளத்தின்
ஒரு தலைமுறை கனவாகி போயின

மழை பொய்த்த மண்ணில்

ஓம் மாத்ரேய நமஹ..


வலிமையான வாழ்வு தரும்
வழிகாட்டியே சரணம்

திடமான மனசு தரும்
சோதனைகளே சரணம்

தைரிய நம்பிக்கை தரும்
தன்ஆளுமைகளே சரணம்

இலக்கின்றி தவிக்கும் பயணத்தில் பாதுகாப்பாய்
உடனிருக்கும் கவசங்களே

ஸ்ரீ அன்னை அரவிந்தமே

சரணம் சரணம் பரிபூரண சரணம் பரமாத்மாக்களே ..!

ஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!



அக்காக்குழந்தை

பிரியமாய் தூக்கி
பிடிக்க முடியாமல்
கீழே போடும்

தம்பிக்குழந்தையை
அக்காக் குழந்தை...