Saturday, 3 October 2015

காலப் பூனை

ஆத்திகவாதி முன் 
அடிக்கடி குறுக்கே போய்

ஆயுள்திட்டு வாங்கும்

அதுவரை அமைதியமர்ந்த
காலப் பூனை

உதிர ஆறு

செங்காட்டு பூமியில்
மழை நாளில்

வீதியெங்கும் ஓடும்
உதிர ஆறு

ஆண்மை வாசம்


முகம் நோக்கி நெருங்கி

முத்தமிடும் முன்
மூக்கு உரசி
விழிப்பு தட்டுகிறது

வழக்கம் போல்

நாசியெங்கும்
உன் ஆண்மை வாசம்

இதழ் பிரிஅழகை

ஈர மழை

தழுவி
சொல்லும்

அவள்
இதழ் பிரிஅழகை

புஷ்பாஞ்சலி


அருள்தரும் ஆனந்தமயிக்கு பன்னீர் பூக்கள்

சங்கடங்கள் விலக்கும் சத்யமயிக்கு ரோஜா பூக்கள்

மனம்சூழும் மணமயமான
சைத்தன்யமயிக்கு செண்பக பூக்கள் ....

அன்பு சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ

பிணந்தின்னி பேரரசு

குழந்தையை
பெண்களை
வயசாளியை

கொன்று குவித்தே

வீரப் புறமுதுகில்
வெற்றிமுரசு கொட்டும்


தடுமாறுது மனசு

தயவு செய்து
குனியாதே

தடுமாறுது
மனசு