Wednesday, 12 October 2016

தனித்திமிராய்

தன் கவலையேதுமின்றி
தனித்திமிராய்
பெண்மை
சோபித்திருப்பது

#தந்தை தோள்களிலே

ஆள்தல் நம்பிக்கையாக

என் 
கவலைகளை காது கொடுத்து 
வளர்த்துவிட்டதில்லை
வருத்தங்கள் கிளறி 
ஆறுதலணைத்ததுமில்லை
சோகங்கள் இமைவடிக்க
இழுத்தணைத்து 
இன்னும் கூட்டுவதில்லை

துயர்கள் மீளும்
தனிமை தாரமல்

தோளருகில்
உடனிருக்கிறாய்

தேவைப்பொழுதில்
#ஆள்தல் நம்பிக்கையாக

ஒருமுறையும் தோற்பதில்லை




ஒருமுனைப்போடு
கவனிப்பதாலே
ஒருமுறையும்
தோற்பதில்லை

விளையாட்டில் கூட
குழந்தைகள்

Tuesday, 11 October 2016

அவளும் பறக்கிறாள்




இரைகளுக்காக அவைகள் 
வருகிறதென்றே
இத்தனை நாள் நினைத்திருந்தாள்
தானியக்கிண்ணம் மறந்து சென்ற போதும்
இறகடித்து வந்தமர்ந்தன
கொத்தும் அலகால் கோதி சிறகமர்த்தி
சிலுப்பி தலையாட்டி
சின்ன நடை நடந்து
பக் பக் என பந்தமாடின
எப்போதும் போல்

கறுப்பி ....நெட்டைதிமிர்
சவலை ... மணிக்குட்டி ...ராசாத்தி 
பெயரிட்டு.........
இப்போதெல்லாம் அவளும்
பறக்கிறாள்
அவைகளுடன்

தாய்முத்தப் பூக்கள்



செல்ல மகள்
கால் ஊஞ்சலாட

தாங்கும் தேகமெங்கும்
சிலிர் கிளையோடி
பூக்கும்

#தாய்முத்தப் பூக்கள் 

வண்ணங்கள் வளர்ந்த பின்



ஆதி கூட்டுப் பொழுதிலிருந்து
அதனை அறிந்தவள் அவள்

வண்ணங்கள் வளர்ந்த பின்
புழுவென அவள் சொன்னாலும்
நம்பும் கண்கள் ஏதுமில்லை

அன்னையே சரணம்



கலையாளும் தேவமே
கருத்து நிறை கருணையே
தெளிவு தரும் வேதமே சரணம் சரணம்

மா சரணம் !!