Saturday, 3 October 2015

அரிசிப் பல்லழகி

கர கர
மொறு மொறு வென
மழைநாளில்

கார இதமாய் 
இருக்கிறது

அரிசிப் பல்லழகியின்
கூழ் வடக கோபம்

சாளர மழைத்துளி யாய்

சாளர மழைத்துளி யாய்
வழியும் மனம்

நினைவு அனலாய்
நிகழ்வு குளிர்ந்து

நீயில்லாமல்

அன்புநிறை பொற்பதமே

தாமிர ஒளி சுடரே போற்றி
தன்னாளுமை யோக வழியே போற்றி

விடியலாய் வந்த வேதமே போற்றி
அமைதி தரும் ஆனந்தமே போற்றி

அன்புநிறை பொற்பதமே
அழைக்க ஓடி வந்து அணைத்து காக்கும் தாய்மைகளே

தேவையானதை ...தேவைப்படும் நிமிடங்களில் தரும் விடியலே.....

தன்னிகரில்லா 
தனித்துவ மேன்மைகளே

சரணம் சரணம் கமலபொற்பாதங்கள் ஆனந்த சரணம்

ஓம் மாத்ரேய நமஹ ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!

நிழல் உயிராய்

அவருக்கான 
நாற்காலியில்
கம்பீரம்
அமர்ந்திருக்கிறார்

இறந்ததாய் சொல்லும்
தாத்தா...

நிழல் உயிராய்

பைத்தியமென்று


உன்னைத்தவிர
வேறு நினைப்பின்றி 
அலைய

நீ உட்பட
அனைவரும் 
சொல்லினர்

பைத்தியமென்று

சலங்கை மகள்






நெளிந்த வாழ்க்கை தந்த
குழைந்த திமிர் பரிசு

ஜல் ஜல்
சலங்கை மகள்

நம்பிக்கை ஊசலாடும் மகவு

ஒய்யாரக் கழியில்
பிள்ளை ஏற்றி
ஒரு சாண் வயிற்றுக்கு
வீதியெங்கும்
வித்தை காட்டினான்

பாவமென்று
பல பார்வை பரிதாபம்
பேசிய போதும்

பயமென்பது அறியாது

காப்பான் தகப்பனென்று
நம்பிக்கை ஊசலாடும் மகவு