Tuesday, 26 May 2015

பிரிவறியா பாச நேசங்கள்

வந்த பாதை நினைந்து
வசித்த இன்ப நிகழ்வுகளுடன்

திரும்ப கால்கள் இல்லாமலே
விரும்பும் மனம்
விட்டுப் போய் கிடக்கிறது

இங்குவந்து
இங்கு பழகி

இங்கேயே சுருண்டு
சுருங்கி

பெரிதாய் காரணமில்லாமல்
பிரிவாய் வலிதரும்

பிரிவறியா பாச நேசங்கள்


புஷ்பாஞ்சலி

தன்னிறைவு ஒளியே...தாய்மையெனும் சுடரே
அருள்தரும் வாழ்வே...அருந்தவ பிறப்பே

ஒப்பில்லா நிறைவே....ஓங்குபுகழ் செல்வமே

பாதுகாப்புக்கு....காகிதமலர்கள்
பக்தி தர.........செம்பருத்தி மலர்கள்

பவித்ர அமைதி தர ..... வெண்மைகண்மலர்கள்

மலர்ப்பிரிய தேவிக்கு..மண் மலர்கள் அனைத்தும்
ஆனந்த சமர்ப்பணம்.....

ஓம் நமோ பகவதே...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!