Sunday, 3 May 2015

அழகெனும் அரிதாரமாய்

அன்பின் அவதாரமாய்....
அழகெனும் அரிதாரமாய்

ஆழ்தவ ஆண்டவ வரமாய்
அருமை நண்பன் Jagadish Kumarவாழ்வின்

ஒளிச்சுடராய்...
விழி பார்வையாய்
மொழி வார்த்தையாய்
உணர்வு கீதமாய்
உயர்வு வேதமாய்

மகளெனும் வேதமாய்
மா தவ பிரியமாய்

மண் ஆள ..விண் இறங்கிய
தேவதை பூப் பிரியமே

அணுவெங்கும் சுக லயம் மீட்டும

ஆனந்த யாழ் ப்ரியமே....

அண்ணன் அரவிந்தின் அன்புநிறை தங்கமே..

நிம்மதி எனும் வார்த்தையின்
ஆனந்த முகவரியை....

உன்னை கருவணைக்க...
கருத்தணைத்துபெறுகின்றனரோ....உன் பெற்றோரும் உற்றோரும்.....

செல்லுமிடமெல்லாம் செல்வம் கொழிக்கும்
அதிர்ஷ்டமேந்திய அன்பு குழந்தை நீ..ஆயுள் நிறைஆண்டுகள் பல பெற்று

புகழ்வெற்றிமாலை தோள்நிறை சூடி

அன்னை ஆசீர்வாதங்களுடன்

வாழ்கவாழிய செல்லமகவே..
செந்தாமரை மகவே...

HAPPY BIRTHDAY (Subha )SREE KUTTIMMA. 

புஷபாஞ்சலி


ஆனந்த மழையாய் வந்திறங்கிய அழகு அன்னைக்குமகிழம் பூக்கள் ...

செல்வ பிரியமாய் செழித்த தேவிக்கு மனோரஞ்சித பூக்கள்

திவ்ய முன்னேற்றம் தரும்
தியாக பிரமத்திற்கு.... மருதாணிப் பூக்கள்...

அர்ப்பணம் அர்ப்பணம் சமர்ப்பணம்.....

ஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!!!!

தோழிமார் நேசம்

முன்னுரை நீ....
முடிவுரை நான்......

இலக்கண புதின....

இலக்கிய வெற்றியடி
இமையணைக்கும்

நம் இயல்பிரியா
தோழிமார் நேசம்

தேவ சொந்தமே

தேவ சொந்தமே
தேவதை பிரியமே

தெய்வ தாய்மையே
தெளிவின் நேர்மையே

நம்பிக்கை சுகந்தமே
உடனிருந்து காக்கும் தவமே
சரணம் சரணம் சங்கீத சன்னிதியே...

ஓம் மாத்ரேய நமஹ ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ

புஷ்பாஞ்சலி





வளமைசெல்வங்கள் தரும்
வான்நிறை பிரியத்திற்கு வாடாமல்லி மலர்கள் சமர்ப்பணம்

அடக்க வாழ்வு தரும் அன்பு தேவிக்கு அரளி மலர்கள் சமர்ப்பணம்

தன்னிறைவு ஆளுமை நிறை
தாய்மை தேவிக்கு தாமரை மலர்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே... ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!

தாய்மையான பிரியமாய்

தாயின் மொழியாய்
தாய்மையான பிரியமாய்

தமையன்யெனும் சொந்தமாய்
தன்னிகரில்லா அன்பாய்

பாச விழியேந்தி ..பவித்ர மனமுடன்
இமையணைத்து எங்களை காக்கும்

எங்கள் அண்ணாவிற்கு..... கவிஞர் மணி பாரதி
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கருணையும் கனிவும்
இரு விழிகளில் பார்வையாய் தாங்கி
பார்க்கும் உயிர்கள அனைத்திடமும்..அன்பு பாசமாட
உங்களால் மட்டுமே முடியும் அண்ணா

எதை எதையோ எதிர்பார்த்து எல்லோரும் இங்கு சுயநலமாய் வந்து ஓட.......எதையுமே எதிர்பார்க்காமல்
பழகும் மனங்களிடம்....அமைந்திருக்கும் நல்குணம் மட்டுமே கண்டு குளிர்வித்து அன்பாடும் பாச நதி நீங்கள்

தங்களின் மனத்திற்கும் தன்னிகரில்லா கண்ணியத்திற்கும்
உயிராடும் சொந்த நட்புகள் உங்கள் மேல் கொண்ட பிரியத்திற்கும் ..நல் சான்று
உங்களை அவர்கள் மீட்டு கொண்டு வந்த பிரார்த்தனைகள்

வழிந்தவிழி துடைக்காமல் நான் இட்ட பதிவில் ..எத்தனை நட்புள்ளங்கள் ..இங்கு வந்து என் தோளணைத்து என் அண்ணா விழிதிறக்க ஒருநொடி மனப் பிரார்த்தனை செய்தார்கள்./..
இஃதே அவரின் அன்பு நேச..அழியா சேமிப்பு

பாசவிரல் பிடித்து நடக்கையில்...உரிமைக் கொட்டு வைத்து
எம் மொழி திருத்துக்கையில் அண்ணா என் ஆசான்...

அம்மா என்றழைத்து ...சொந்தம் பரிமாறி
உரிமை நிகழ்வாடுகையில்..நான் அவரின் தாய்.........

பிறவிதோறும் தொடரவேண்டும் இந்த ஆயுள் சொந்தமென
ஆன்மீக அன்னை வணங்கி...வேண்டி

வாழ்த்த மொழியின்றி ....நெகிழ்கிறேன்..அண்ணா
என்றும் நீங்கள் வாழ்வேண்டும்...
எங்களை வாழ்த்தி ஆசீர்வாதம் செய்ய

இன்று உங்கள் திருநாள்......என்
மனம் நிறைந்த மகிழ்வு நாள் அண்ணா