தலைப்புகள்...
அன்னை
இணைய வெளியீடு
இயற்கை
இரங்கல்
இறை
கதிர்
காதல்
காப்பியம்
சுந்தரி
தலைவர்கள்
தனிமை
தாய்மை
தேசியம்
நட்பு
நன்றி மலர்
நிகழ்வுகள்
நேசம்
படக் கவிதைகள்
பெண்மை
பொய்மை
மழலை
மழை
முதுமை
முத்தம்
மொழி.
யதார்த்தங்கள்
ரொமான்ஸ்
வலி
வலைச் சரம்
வாழ்த்து
வாழ்வியல்
Thursday, 26 March 2015
கொடி இடைப் பூக்கள்
சரம் சரமாய்
மொட்டழகு விரித்து
கீழ் தொங்குகிறது
அவளின்
இலையுதிர்கால
கொடி இடைப் பூக்கள்
உணர்வாடி சுமக்க முடியும்
எப்போதும்
உன் முதுகில்
நான்
உன்னைத் தவிர
வேறு யார்
என்னை
இத்தனை
இதம் பதமாய்
இமை காத்து
உணர்வாடி
சுமக்க முடியும்...உயிரே
வாலிப மனசு
ஆடை குறையிட்டு
அலங்காரம் நிறையிடுகிறாள்
வழிந்த வனப்பின்
பாதையில்
பார்வை தேங்கி
வாடித் துவளுது
வாலிப மனசு
கருணைப் பிரியமே
கனிந்த தேவமே
கருணைப் பிரியமே
காவல் கீதமே
கசியும் ராகமே
கமல வேதமே
கண்ணிய மனமே
தாவி அணைக்கும் தாய்மையே
என்றும் நின் மடி நாடி பிள்ளைச் சரணம் பரமமே...!!!!!
ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ.....!!!
ஆதிகால மிச்சமாய்
ஆதிகால மிச்சமாய்
பூமியில்
அப்பத்தாவின்
வெட்கம்
பயண நேசங்கள்
தொடர்ந்து போகவும்
முடியாமல்
திரும்பி வரவும்
பாதையில்லாமல்
பாதியிலேயே நின்று
தவிக்குது
பழகி ..புரிந்து
சரியில்லை என
தெரிந்தும்
விலகி விட
முடியாத
பயண நேசங்கள்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)