Friday, 20 February 2015

செல்ல மகள் படிக்கிறாள்

அறை முழுதும்
விசிறிய தாள்கள்

சுவரெங்கும் ஓவியகிறுக்கல்கள்

சத்தமில்லாத வீடு

செல்ல மகள் படிக்கிறாள்

வைராக்கியபாறை மனம்

ஊர் பெயர் தெரியாத

மாசற்ற மழலை முகம்
பார்க்கும் போதெல்லாம்

தன்னால்
உள்குழைந்து இளகுகிறது

எஃகு கவசமிட்ட
வைராக்கியபாறை மனம்

இமை அணைப்பாய் தேவமே

ஆனந்தமயியாய் வந்த அன்பின் சொரூபமே
நீடித்த வாழ்வு நல்கி நில உயிர்கள் காக்கும் வேதமே

வளம் பலம் தந்து வெற்றியாய் நிறையும் தாயே
மனதோடுமகிழ்வு தரும் நிம்மதி பிரியமே

மனம் செயல் எண்ணம் வாக்கு தூய்மையாய் புகுந்து
நல்லொழுக்க வாழ்வு அமைத்து.....
தன்னம்பிக்கை ஆளுமைகளுடன்...
குழந்தைமனப் பிரியங்கள் உடன் சூழ்ந்து
உன்னதக் கல்வியாய்...
உவகைபுகழாய்...
உற்சாக சிறகாய்....
உத்வேக நம்பிக்கையாய்......எண்ணியயாவும் கைகூடி
உயர்வாழ்வு வாழ்ந்து....அவனி சிறக்க
நிம் மலரடி சரணடைந்து வேண்டுகிறோம் அன்னையே
இமை அணைப்பாய் தேவமே

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!!

சுவாசம் நீயானால்....

நிற்கிறேன் நான்

நிழல் விழுகிறாய் நீ

வாழ்தலும் வசித்தலும்
பேரின்ப பெரும் நிம்மதியடி

சுவாசம் நீயானால்......

போன்சாய் காதலி

ஓரச்சிறு பார்வையில்
விதைக் காலூன்றி

கனி தரும்

போன்சாய் காதலியடி நீ

நம்பிக்கை வேரற்று

உண்மையான நேசிப்பு
போலி உருக்களிடம்

சிக்கி
கொல்லும் போது

மனிதப் பிறவி மீதான
நம்பிக்கை
வேரற்று போகிறது

வாழ்வுப் பேரிளமைகள்

எங்க தாத்தா
எங்க பாட்டி

என்று
அக்காவும் தம்பியும்
மாறி மாறி
மடிதாவி

சண்டையிட்டு
அழுது அமர

சந்தோஷமாய்
அணைத்து சிரித்து

ஆயுள் கூடுகிறது

வரப்பொக்கிஷ
வாழ்வுப் பேரிளமைகள்