Sunday, 1 February 2015

இளங்கன்னி நேசங்களை

இதழாய்
இதழ் சீவி

இமை குத்த

’’இடை’’வெளி
இனிப்போடு

பார்வை ருசிக்க
பந்தி பரப்புகிறாள்

இளங் காளை..இதயங்கவ்வும்
இளஞ்சூட்டு இளஞ்சுவை
இளங்கன்னி நேசங்களை

பச்சைய பூமியை

ஓசையோடு வரும்
போர்

ஓசையில்லாமல்
சிதைத்துப் போகிறது

குழந்தைகளின்
பச்சைய பூமியை

புஷ்பாஞ்சலி

மலரும் மனம் தரும் மலர்களின் தேவிக்கு
மகிழம்பூக்கள் சமர்ப்பணம்

மண்ணுயிர் காக்க வந்த மகத்துவ பிரியத்திற்கு
மனோரஞ்சித மலர்கள் சமர்ப்பணம்

மன்னிக்கும் தன்மை அருளும்
மகிழ்ச்சியின் கடலுக்கு மஞ்சனத்தி மலர்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!!!!

தாராள மனசு

விடிய விடிய
விழிச்சு வித்தாலும்
விழிச் சிகிச்சைக்கு கூட
தேறாது..என்று
தெரிந்தபின்னும்
வியாபார கணக்கில்லாம

கூட ரெண்டுசேர்த்து
ஓசி அள்ளிப் போடுறா

தாராள மனசு
தாயம்மா பாட்டி

மச்சப் பார்வை

நெருங்கி உரசாமல்
கொளுத்திப் போகிறாய்

நினைச்சு நினைச்சு
பத்திகிறது

மச்சான்
மச்சப் பார்வை

சமுத்திர பெரும் வாழ்வு

நடந்தவைகளை
கடந்து

தெரிந்தவர்களை
விலக்கி

தொடர்ந்தவர்களை
தொலைத்து

வாழ்ந்தவர்களை
வழியிலே விட்டு

எவருக்கும் நிக்காமால்
ஆண்டொன்றுக்கு
வயதொன்று கூட்டி

அனுபவமாய் நம்மை
முதுமை சொட்டி

கண்முன்னே கரைக்கிறது

தங்கமீன் பிறவியின்
சமுத்திர பெரும் வாழ்வு


கரும்புள்ளி குத்தி

கிட்ட நெருங்கி
கச்சிதமாய் கண்டு
கரும்புள்ளி குத்தி

கருணை விலக்கி விரட்டப்பட்ட
கருப்பாடு கூட்டம் ஒன்று

கூடி நின்று
குள்ளநரித் தம்பட்டம்
அடிக்கிறதாம்

எட்டாக் கனியை நினைத்து
சீ..சீ ..
இஃது புளிக்குமென்று