Sunday, 1 February 2015

பாக்கியம் பெற்ற அப்பாக்கள்

வாழ்வியல்
வளப் போராட்டங்களில்

தாளா முடியா துயரம்
நெஞ்சணைக்க

வாய்விட்டு அழ முடியா
வாதனையில்

துணைப் பகிர்தல் கூட
துயர் சேர்க்க

எதுவுமறியாத மகள்

தாய்மை தலைகோதி
மடி கிடத்தும்

பாக்கியம் பெற்ற அப்பாக்கள்
என்றும்

எவரும் வெல்ல முடியா
பலசாலிகளே

ஆதவனாய் ஒளியெழுந்து

ஆயிரம்கோடி மின்னல்கள்
ஆளுமையாய் ஒன்றிறங்கி....
ஆதவனாய் ஒளியெழுந்து
அவனி வந்த
அன்புச் சகோதரனின்... Venkatesan Venkatesan
அருந்தவ புதல்வன் ஷியாம் குட்டிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வாழையடி வாழைப் பரம்பரையின்
பெருமை சொல்லி பெயர் பரப்ப
பூமி வந்த வம்சக் குருத்தே

குட்டி சிங்கமாய் ,,,குதுகல நடையுடன்
மனது அள்ளி மகிழ்ச்சி நிறைத்து
வெற்றி நடை போடும்
வேந்தர்வழி தென்றல் பிரியமே

கல்விகேள்வி செல்வங்களுடன்
நலம்பலம் ஆயுள் நிறைத்து
புகழ் மாலை தோள் சேர்த்து...
அன்னை தந்தை தெய்வ ஆசிகளுடனும்

இந்த,,அன்பு அத்தையின் பிரியங்களுடனும்

குலம் தழைக்கும் எங்கள் செல்வக்குருத்து
வாழ்க ..வாழிய பல்லாண்டு...

இனிய ஆசீர்வாதங்கள் டா குட்டி தங்கம்...


வாழ்வியல் பிரியமே

வசந்த அன்னையெனும் வாழ்வியல் பிரியமே

நிம்மதியெனும் நிதர்சன சூட்சமமே

இருகரம் நீட்டி காக்கும் இனிமை ஸ்தூலமே....

சரணம் சரணம் பரிபூரண சரணம் பரமமே...!!!!

குருவெனும் உள் மனகுரல்


கற்றுத் தேற
தேறித் தெளிய

தெளிந்து தொடர
தொடர்ந்து தொடர்விக்க

குருவெனும்
உள் மனகுரல் வகுக்கும்

உயர்பணிவு வழிகாட்டல்

நிலைக்கும் சாதனைக்கு
நிச்சய அவசியமே

தீரவைராக்கிய மனசு






வெற்றி வருகுது..வேல் வருகுது
சூற்றி சூழும் பகையே விலகு

வீரன் வருகிறான் வேந்தன் வருகிறான்
எதிர் நிற்கும் கோழையே ஓடு

பரி வருகுது வேகம் வருகுது
தெறித்து வழிவிடு பாவமே

சூரன் வருகிறான் தீரன் வருகிறான்
சுதந்திரம் காக்க என் மறவன் வருகிறான்

சூல் கொண்ட வெள்ளையனே
விடியல் காண விலகி ஓடு
பிச்சையிடுகிறோம் உயிரை
பிடித்தெடுத்து ஓடுடா கயவனே

தினவெடுத்த தோள்திமிராய்
நிமிர் மீசை முறுக்கு

எம் கட்டபொம்மு வருகிறான்

கப்பம் கேட்ட கழனித்திருடனே

இனி
கனவில் கூட என் தேசம் நினையாதே

என்றே ...

வாழ்ந்த சரித்திர ஓவியங்களை.....
வரலாறாய்....விழியணைக்கையில்

சூழ் முரசு கொட்டுகிறது
எம் நாடெனும்
பெருமிதமாய் விம்மித்தணியும்

மறத்தமிழச்சியின்
தீரவைராக்கிய மனசு



வலி தீர்க்கும் மொழி


சில வலிகளுக்கு

வழிகள் தந்து
அணைக்கிறது

சில மொழிகள்

விழியின் இமையென








விழியின் இமையென....
விழி மணி நிறைந்து....
விழித்திருக்கும் உறவெங்கும்..... இரா. குமார்
விரத தவமிருந்து

வான்சித்தர் வாழ்த்துரை எழுத
இறைப்பிரியங்கள் இடவலம் அமர்ந்து ஆசிவழங்க
தேவர்கள எல்லாம் பன் பாடி பூத்தூவி
தேவதைகள் சாமரம் வீசிய சக்தி திருநாளில்

மேன்மக்கள் குழும
மேலோர் கைகுலுக்க
மேல் ஆளுமைகளோடு
மென்மை பிரியங்கள் ஏந்திய
கலைமகளாம் திருமகள்வடிவான
கல்விகேள்வி சிறந்த கற்பியல் குலமகளை
எங்கள் அண்ணியார்...கலைச்செல்வியரின்..கரம்பிடித்து
கருத்தொருமித்து.....கஷ்டசூழலில்...எங்கும் எதிலும் குறைஎனும் சொல்லே மனமோடு..கண்தீண்டாது
தாய்மைச்சிறகுவிரித்து காத்து .......

இவர் போல் யாருண்டு...இவருக்கு நிகரும் யாருண்டு
என்றே...வள்ளல் மனமாய்...வாழ்த்தும் குணமாய்
பொன்கழஞ்சு பிரியங்கள் தாங்கி,.....
எதிரிக்கும் இரங்கும் ஆசானே
கேட்பவர் கேட்காமல் இருப்பதை அள்ளி வழங்கும்
கர்ணரே..கொடுக்க கொடுக்க பெருகும் அமுதசுரபியே

விரலசைத்தால்...விழுந்தடித்து செய்ய ஆட்கள் நிறைந்திருப்பினும்....
சக்தி மிகு ஆட்சிபீடத்தில் அமர்ந்திருப்பினும்
தனக்கென இதுவரை எதுவும் ஏற்றுக்கொள்ளாமல்...
தான் என்று எதுவுமில்லை என்றே எண்ணும் சிகரப்பணிவே....
பார்த்தவர் அறிந்து .....பழகியவர் உணர்ந்து.....
கேட்பவர் எல்லாம் வியந்து ....உடனிருப்பவர் கொண்டாடும்
தாய்மொழி பிரமாண்டமே......

எங்கள் முல்லை அரும்பின் ...முழுமை செல்வமே
தான் வரும் தலைமுறைக்கு.....தனி வழி கொடுத்து
சிகரமென எழுந்து நிறக்கும் சாதனை வேள்வியரே

தமக்கையாம் என் மொழியறிவிற்கும்...தனிஅமைச்சு இடம் தரும் தகைசார்ந்த சான்றோரே

உங்கள் திருநாளில்....உம்மிடம் நாங்கள் தாழ் பணிந்து
நாங்கள் ஆசி வேண்டுகிறோம்....

தங்கள் உயிர் நேசிப்பு
தாய்மொழியாம் தமிழன்னை...நான் வணங்கும் என் அன்னை உடனிருந்து..ஆயிரம் பிறைகண்ட வாழ்வோடு...
அவனிகல்வெட்டாய் தாங்கள் இருவரும் நீடுழி நிலைத்திருக்க

வள்ளுவன் வாசுகி போல்....இறை செய்த உருவமாய்
எங்கள் ஆசானும்..அண்ணியாரும் ....செழுமையெழுந்த சிற்பங்களாய்..இன்னும் இருநூறு ஆண்டுகள்..கழித்தும் ,..இலக்கியம் போற்றி வணங்கும் தலைமுறை முன்னோட்டம்
கண்முன் தோன்றி விழிநிறைய.....

மங்கலம் பொங்கும்தங்கள் மணநாளில்....
மனத்தாழ் பணிந்து வணங்குகிறேன்
இனிய வணக்கங்கள் ஆசானே...!!!!!!