குழைவு பிரியமாய்
மனம் நிறையும்
குழந்தை அன்னைக்கு
மணமிகு செண்பக பூக்கள்
மருகும் உள்ளம் காக்க
மடியேறி அமரும்
பிள்ளை அன்னைக்கு
பிச்சிப் பூக்கள்
அன்னை ..பிள்ளை
அனைத்தும் நானே என
அணைத்து காக்கும்
அருள் நிறை தேவமை தாய்மைக்கு
ஆழ் சிவப்பு ரோஜாபூக்கள்
வேத சமர்ப்பணம்
மா.....சரணம்
ஓம் மாத்ரேய நமஹ ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ ...!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..