எப்பிறவி வினையோ
இப்பிறவி கழிவோ
மா என்றழைக்கும் முன்
குழறிய மொழியில்
உள்ளிழுத்த நாக்கு வழி
உமிழ் வடிந்தது
பார்த்தவிழி பார்த்தபடி இருக்க
அழைத்தாலும் திரும்பவில்லை
எடுத்ததெற்கெல்லாம் சிரித்து
எந்தை வேதனைகூட்ட
எவரிட்ட சாபமோ
இருளிட்ட பய அதிர்வோ
மூளைநரம்பு பிறழ்வென
குறைமாதவளர்ச்சி சொல்லி
மருத்துவமும் கைவிரிக்க
வேண்டாத தெய்வமில்லை
போகாத கோவில்லை
வேதனைசொல்லி அழதிரணியற்று
ஊனமாய் ஊமைமனம்
உறைந்து பொசுங்க
பத்துமாத சுமையை
ஆயுசெங்கும் இடுப்பில் தாங்கி
கருகொடுத்தவன் ஓடினாலும்
உடன்பிறப்பெல்லாம் உதறினாலும்
கடைசிவரை வழியும் வாய்துடைத்து
உணவூட்டி....
இயற்கை கழிவகற்றி
இறைவனளித்த பரிசு என
மன உரம் கொண்ட போதும்
மன்னவன் நீயடா...
சிங்காரித்து கொஞ்சும் தெய்வத்தாயை
சிரிப்பொழுக கத்தி அடிக்கிறது
இன்னதென்று
தன்பிறவி புரியாத
இறை கைப்பிள்ளை
இப்பிறவி கழிவோ
மா என்றழைக்கும் முன்
குழறிய மொழியில்
உள்ளிழுத்த நாக்கு வழி
உமிழ் வடிந்தது
பார்த்தவிழி பார்த்தபடி இருக்க
அழைத்தாலும் திரும்பவில்லை
எடுத்ததெற்கெல்லாம் சிரித்து
எந்தை வேதனைகூட்ட
எவரிட்ட சாபமோ
இருளிட்ட பய அதிர்வோ
மூளைநரம்பு பிறழ்வென
குறைமாதவளர்ச்சி சொல்லி
மருத்துவமும் கைவிரிக்க
வேண்டாத தெய்வமில்லை
போகாத கோவில்லை
வேதனைசொல்லி அழதிரணியற்று
ஊனமாய் ஊமைமனம்
உறைந்து பொசுங்க
பத்துமாத சுமையை
ஆயுசெங்கும் இடுப்பில் தாங்கி
கருகொடுத்தவன் ஓடினாலும்
உடன்பிறப்பெல்லாம் உதறினாலும்
கடைசிவரை வழியும் வாய்துடைத்து
உணவூட்டி....
இயற்கை கழிவகற்றி
இறைவனளித்த பரிசு என
மன உரம் கொண்ட போதும்
மன்னவன் நீயடா...
சிங்காரித்து கொஞ்சும் தெய்வத்தாயை
சிரிப்பொழுக கத்தி அடிக்கிறது
இன்னதென்று
தன்பிறவி புரியாத
இறை கைப்பிள்ளை
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..