Friday 21 August 2015

கருணைவிழியில்

இரக்கமின்றி அடித்தேன்

கருணைவிழியில்
வழியும் கனிவை
கவனமாய் துடைத்து

கொடும் மொழி வாள்
விளாசினேன்

நினைத்து நினைத்து
கதறினாய்

வலிக்கட்டும்
உறைக்கட்டுமென
ஈரமில்லாமல்
இருதயம் அறுத்தேன்

பலநேரம்

உயிர் உருவி நரம்பிழுக்க
ஊமையாய் உள்கலங்கி

நானா...நானா. என

அடித்த கைஉற்றுப்
பார்ப்பேன்...

ரேகையும் பழிக்கும்
பாவியடி நீ என்று

பிள்ளை குற்றம்
பொறுக்காது

கழுத்தறுத்தவளை

இன்னமும்

அன்னையெனவே
அழைப்பெடுத்து...
வாழ்த்துகிறாய்

இனியும் சொல்லாதே

இக் கொடுமைகாரியை
தாயென்று

தாய்மைக்கு இவள்
தகுதியற்றவள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..