இரக்கமின்றி அடித்தேன்
கருணைவிழியில்
வழியும் கனிவை
கவனமாய் துடைத்து
கொடும் மொழி வாள்
விளாசினேன்
நினைத்து நினைத்து
கதறினாய்
வலிக்கட்டும்
உறைக்கட்டுமென
ஈரமில்லாமல்
இருதயம் அறுத்தேன்
பலநேரம்
உயிர் உருவி நரம்பிழுக்க
ஊமையாய் உள்கலங்கி
நானா...நானா. என
அடித்த கைஉற்றுப்
பார்ப்பேன்...
ரேகையும் பழிக்கும்
பாவியடி நீ என்று
பிள்ளை குற்றம்
பொறுக்காது
கழுத்தறுத்தவளை
இன்னமும்
அன்னையெனவே
அழைப்பெடுத்து...
வாழ்த்துகிறாய்
இனியும் சொல்லாதே
இக் கொடுமைகாரியை
தாயென்று
தாய்மைக்கு இவள்
தகுதியற்றவள்
கருணைவிழியில்
வழியும் கனிவை
கவனமாய் துடைத்து
கொடும் மொழி வாள்
விளாசினேன்
நினைத்து நினைத்து
கதறினாய்
வலிக்கட்டும்
உறைக்கட்டுமென
ஈரமில்லாமல்
இருதயம் அறுத்தேன்
பலநேரம்
உயிர் உருவி நரம்பிழுக்க
ஊமையாய் உள்கலங்கி
நானா...நானா. என
அடித்த கைஉற்றுப்
பார்ப்பேன்...
ரேகையும் பழிக்கும்
பாவியடி நீ என்று
பிள்ளை குற்றம்
பொறுக்காது
கழுத்தறுத்தவளை
இன்னமும்
அன்னையெனவே
அழைப்பெடுத்து...
வாழ்த்துகிறாய்
இனியும் சொல்லாதே
இக் கொடுமைகாரியை
தாயென்று
தாய்மைக்கு இவள்
தகுதியற்றவள்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..