Sunday 2 August 2015

தெய்வப் பேராண்மை

பேரன் கதற கதற
மகன் வந்து
விட்டுப் போகிறான்

திட்டவும் மனசில்லாமல்
வசைபாடிய மருமகளையும்

வேற
வழி அறியாத மகனையும்

நலம் வாழ வாழ்த்தியே
ஆதங்கம் தேடும்

முதிய இல்லக்
கோவில் உறையும்

பெத்தவர்கள் எனும்
தெய்வப் பேராண்மை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..