Sunday 23 August 2015

புஷ்பாஞ்சலி

சரணாகதி பிரியைக்கு
நாட்டு ரோஜா

சமத்துவ தேவமைக்கு
பக்திதுளசி

சன்னிதான மகிமைக்கு
வாடாமல்லி

சந்தோஷ மாயிக்கு
மல்லிகை

ஒளிநிறை அம்மையே ..
ஓங்குபொருள் அன்னையே

பிரியமலரெடுத்து..பிள்ளை அன்பைணைத்து
அழகுநிறை ஆனந்தமாய் சரணகதியாகி சமர்ப்பிக்கிறோம் தாய்மையே

சஞ்சல சங்கடங்கள் விலக்கி
வெற்றி முன்னேற்றங்கள் அருளி
வேதனைபாதையெங்கும் பனிஉருவாய்
உடன்நம்பிக்கையாய் உயிர்தைரியமாய்
உடன்நின்று காப்பாய் ..நீயே

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..