Thursday 11 June 2015

இன்னிசை ராஜராஜாங்கமே...இனிய வாழ்த்துக்கள்




இசை பிரம்மனே....இளைய ராஜனே

பண்ணையபுர பவித்ர தவமே
பாவலர் தம்பியே
பரந்த உலகின் விரிந்த இசைவானே
பத்மபூச தேச இசை விருதே
பஞ்சமுகி ராக ...பரமபிதாவே

மேட்டுக்குடி சிம்மாசனமிட்ட இசை உலகில்
கிராமிய மணமெடுத்து.....பத்திய பதியமிட்டு
மென் இசை தாலாட்டு சொல்லி....
ஓலை கீத்தொலியாய்....குடிசைதட்டி

மரணமில்லா இரவுகள் தரும் மகேசனே

மொழிகளின்றி அமைதியாண்டு...
ஒலிகளாலே பேசும் வித்தகனே

ஆன்மீக அகரமே
ரமணர்வழி அருள்குருவே

தவம் செய்தாரோ சின்னத்தாயம்மாள்
இசைவேள்வியான உம்மை கருவேந்த

நாற்பதுகளில்..தொடங்கி நாநிலம் இருக்கும் வரை
உலகுவாழும் உன்னத ஒலி நாதமே

சிம்பெனியும் சிணுங்கி வழியும்
நீ தொட்டு தொடர்ந்தால்

சிவனும் வந்து தவம் அமர்வான்
திருவாசக கீதத்தில்

மலையாய் கண்ணீர் வழிந்து உருகும்
உம் ரமணமாலை உருட்டலில்

ஓம் கார இசையே ..உலகாளும் தொப்புள்கொடியே

இறைவன் இசைவடிவானவன் எனில்
நீயும் இறைவனே ..இங்கு பல மனங்களுக்கு

சந்தோஷ கவலை...கலவை
உணர்வுகளாய் வாழும் மனிதனில்
நீ உதிரமானாய்..உயர்பிறவியே

மூன்றுபங்கு கடல் ஒருபங்கு நிலமே பூமியெனில்.......

வாழுமையா ராஜய்யா...
இயற்கையின்
புண்ணியப்பிரதியாய்நீர்.....
நீர்மையாய்....
பூலோகம் நிறைந்து

இன்னிசை ராஜராஜாங்கமே...இனிய வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..