Friday 12 June 2015

மொழிக் கருத்தாய்வு

ஆயிரம் அன்பின் ப்ரிய மலர்களை
காம்போடு எடுத்து....அட்சதையென
தோழமைகளின் கையில் கொடுத்து

என் மொழிக் கருத்தாய்வின் மூலம்..

https://www.facebook.com/photo.php?fbid=668875529912015&set=a.117588265040747.20225.100003687237942&type=1&theater

என் மீது தூவி வாழ்த்து மழையில்
எனை மூச்சுத் திணற முத்துக்குளிக்க வைத்த
அன்புத் தம்பியே... Maha Suman

என்னவென்று நன்றி சொல்லி நெகிழ்வேன்
உம் தாய்மொழி பற்றையும்..தமக்கைபிரிய அன்பையும்

பேராண்மையும்..பெருந்தன்மை மனமும் கொண்டு
ரசிகனாகி....கலையுலகம் கொண்டாடும் கலைஞனாகி
ஆழ் எழுத்துக்களும் அற்புத சிந்தனைகளின் வழி
இலக்கிய உலகில் தனக்கென தனியிடம் பதித்து

விவாதமேடையாய்..சமூக அக்கறை கொண்டு
இன்னும் பிள்ளையென பணிவு மொழியாடி
பவித்திர கண்ணிய கனிவாடி....

அக்கா என்றே அமுதுற என்னை அழைத்து ....

அனைத்து கவித்தோழமைகளையும்..கருத்தாய்வு மூலம் ..சிகரமேற்றி அழகுபார்க்கும் நீர்

முப்பிறவி மூவேந்தர் பரம்பரையோ
இப்பிறவி இலக்கிய விடிவெள்ளியோ

வாழ்க மகிழம்பூ மணமாய்..மணம் கொண்ட உம் மனம் போல் என்றும் ....சொல்விளைந்தாடும் ஈர நிலமாய்

வாழ்த்துக்கள் வாங்கி தந்தவனை..நன்றி வாழ்த்தி
நானும் நெகிழ்கிறேன் உன் அன்பாடல் பிரியங்களில்
ஆயுள்பிரிய தவம் வரம்..உம்மை நான் இங்கு சந்தித்து பிள்ளை பிரியமாடுவது

மிக்க மகிழ்வுகள் தம்பி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..