Friday 12 June 2015

யாரிங்கே இவள்??

சுவாசம் கெஞ்சியே
மூச்சுகுழல் திறக்கிறது
அவளின்
முதுமைக்கும் இளமைக்கும்
இடைப்பட்ட..இடஒதுக்கீடு வாழ்வு

சேயானாள்..
மங்கை...மனைவியானாள்
தாயானாள்....பாசசிறை வீழ்ந்து
தனியே அவள் யாரென்பதே
அவளுள் அடிக்கடி எழும்
விடையில்லா கேள்வி

தியாகம் அவளின் மேன்மை
நேர்மை அரும்பெரும் அணிகலன்
எல்லோரிலும் அவள் நிறைந்திருந்தாலும்
எதனாலும் அவளை பூரணம் செய்ய முடியாது

உவமைஆயிரம் செப்பி
ஒய்யாரக் கோபுரம் ஏற்றினாலும்

உள்மூச்சு பொசுங்கி
தான் யாரென்று தெரியாது
தனக்கெதுவேண்டுமென்று புரியாது
வெறுமைவாழ்வு சப்பிபோட்ட
மாங்கொட்டையாய்....

விதையூன்ற தனித்திரணியற்று

இன்னும் போராடிக் கொண்டிருக்கும்
33 சதவீத பெண்மைகளில்
அவளும் ஒருத்தியே

விடுதலை கிடைத்தும்
விடைதெரியா இவ் வீரப் போராளிக்கு

பெரும்நிம்மதி நிறைவென்பது
செய்யும் செயலுக்கு கிடைக்கும்

மெச்சுதல் அங்கீகாரம் தானே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..