Friday 12 June 2015

சொர்க்கம் சென்ற தாய்

நாளாய்
நிமிடமாய்
நொடிகளாய்

நினைவு நாள்
நெருங்க நெருங்க

முகம் பார்க்கும் கண்ணாடியில்
முன்நின்று அதட்டும் குரலில்
அடிக்கடி உச்சரிக்கும் பெயரில்

வேகமாய் வந்து
ஏக்கமாய் அழுத்தி
அப்பிக் கொள்கிறாள்

சவலைப் பிள்ளையை
சட்டென விட்டு
சொர்க்கம் சென்ற தாய்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..