Tuesday 12 May 2015

நித்தியமானவளே போற்றி

என்னவென்று தெரியவில்லை
எழுத ஒன்றும் தெளிவில்லை

உன் மொழியணைக்க
இன்று வேண்டாமென நான்
இமை மூட

வழிதெரியா பிள்ளைக்கு வழிகாட்டி ...அலைபேசி வழி
அன்னை மொழியாய் என் எழுத்தில் அவர்கள் நெகிழ

மீழ்ந்த என்னை மீட்டெடுத்து
எழுதென எழுது கோல் தரும் தெய்வமே....தேவமே

நிர்மலமானவளே போற்றி
நித்தியமானவளே போற்றி

கருணையானவளே சரணம்
காக்கும் அருமருந்தே சரணம்

சத்திய சுடரே போற்றி
சரித்திர வாழ்வே போற்றி

சகலமும் ஆனவளே
என் அன்னைப்பிரியமே

கதறும் மனம் காக்கும் நிம்மதியே

சரணம் சரணம் பரிபூரண சரணம் தாய்மையே

ஓம்நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..