Sunday 3 May 2015

அழகெனும் அரிதாரமாய்

அன்பின் அவதாரமாய்....
அழகெனும் அரிதாரமாய்

ஆழ்தவ ஆண்டவ வரமாய்
அருமை நண்பன் Jagadish Kumarவாழ்வின்

ஒளிச்சுடராய்...
விழி பார்வையாய்
மொழி வார்த்தையாய்
உணர்வு கீதமாய்
உயர்வு வேதமாய்

மகளெனும் வேதமாய்
மா தவ பிரியமாய்

மண் ஆள ..விண் இறங்கிய
தேவதை பூப் பிரியமே

அணுவெங்கும் சுக லயம் மீட்டும

ஆனந்த யாழ் ப்ரியமே....

அண்ணன் அரவிந்தின் அன்புநிறை தங்கமே..

நிம்மதி எனும் வார்த்தையின்
ஆனந்த முகவரியை....

உன்னை கருவணைக்க...
கருத்தணைத்துபெறுகின்றனரோ....உன் பெற்றோரும் உற்றோரும்.....

செல்லுமிடமெல்லாம் செல்வம் கொழிக்கும்
அதிர்ஷ்டமேந்திய அன்பு குழந்தை நீ..ஆயுள் நிறைஆண்டுகள் பல பெற்று

புகழ்வெற்றிமாலை தோள்நிறை சூடி

அன்னை ஆசீர்வாதங்களுடன்

வாழ்கவாழிய செல்லமகவே..
செந்தாமரை மகவே...

HAPPY BIRTHDAY (Subha )SREE KUTTIMMA. 

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..