Wednesday 8 April 2015

மனநிறை பூ தூவி வாழ்த்துக்கிறேன்

அன்பின் பிரியமாய்}}
(((சுந்தரி மணாளன்))) Sundari Manalan
ஆயுள் சொந்தமாய்}}

வரதவமேந்தி வானோர்கள் வாழ்த்த
வையத்துள்ளோர் மனம் மகிழ

ஈருயிரென வந்த
இணை உயிரும்...ஓருயிராய்
இணைந்த தேவபிரிய வரங்களே

இன்று மணநாள் காணும்
என் அன்பு தங்கையே ..கண்ணான தங்கையின் ...
கைபிடித்து கருத்தொருமித்த Valli Manalan
அவள் தம் ஆசை மணாளரே

இராமன் சீதை...
வள்ளுவன் வாசுகி....எனும்
காப்பிய நாயக செழுமை வழியாய்
கடவுள் பிறப்பின் மகிமையாய்....

இதுதான் இணை வாழ்வு..இப்படித்தான் இருக்கவேண்டும்
நேசபிரியங்கள் என்று...
அன்றில் பறவையாய்..அன்னத்தூவிகையேந்தி
சொல்லின் செயலாய்
எண்ணத்தின் நினைவாய்

குடும்ப வாழ்வின் குல எடுத்துகாட்டாய்
உயர்வசந்த வழிகாட்டியாய்..வாழ்ந்து வரும்
நீங்கள் இருவரும்..ஏழேழ் பிறவியிலும்

இமையணைத்து இதயம் சேர்ந்தவர்களே
மண்ணில் மனவாழ்க்கை அடியெடுத்து வைக்கும் ஒவ்வொருவரும் ..பார்த்து பழகி வழிநடக்கவேண்டும்
உங்களை எடுத்துகாட்டாய் ..எடுத்துக் கொண்டு....

அழுதாலும் சிரித்தாலும் அணைத்து உடன் நின்று
இணைந்து துடிக்கும் இதயத்தின் இருஇணை சப்தமாகி
உயிராடும் நீங்கள்....

என்றும் என்றென்றும் ..இதே இன்பப் பிரியங்களுடன்
எடுக்கும் பிறவிதோறும் இணையிருந்து சொந்தமாட

நான் வணங்கும் அன்னை முன் மண்டியிட்டு வேண்டி வணங்கி வாழ்த்துகிறேன்....

இனிய திருமணவாழ்த்துக்கள்...சொந்தங்களே

எப்பிறவி நான் புண்ணியம் செய்தேன் ..இப்பிறவியில்
இந்த முகநூலில் உங்களை சொந்தமாய் உடன் அணைக்க

தாய்ப்பாலிலும் தூய்மையானவள் என் தங்கை
அவளின் மனம் தாங்கும் மணிமகுடம் நீங்கள் தம்பி

என்றும் அன்புமகிழ்வு மங்கல நிகழ்வுகள் உடன் சூழ
கலங்கும் ஆனந்தவிழி நிறைய

மஞ்சள் அரிசி ..மனநிறை பூ தூவி வாழ்த்துக்கிறேன்....

வாழிய ..வாழிய...வாழியடி நீ தங்கையே..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..