பேருந்துகான காத்திருப்பில்
பார்வை சிக்கினான்
பாதையோர பரட்டை
காதலி கைவிட்டிருப்பாளோ
மனைவி ஓடிப் போயிருப்பாளோ
தொழில் நட்டமோ
சுற்றிய சொந்த துரோகமோ
கணநிமிடத்தில் கவலையாய்
ஆயிரம் சிந்தனை உள் ஓட
சட்டென நிமிர்ந்து
சட்டமாய் இளிக்கும் அவன்
சொல்லிக் கடக்கிறான்
காயமே இதுபொய்யடா
காற்றடைத்த பையடா என
பரிதவித்த எண்ணம்
பாதை திரும்புது
இவன்
சித்தனா ..பித்தனா
எப்படி இவனை
பைத்தியம் என்பது..????
பார்வை சிக்கினான்
பாதையோர பரட்டை
காதலி கைவிட்டிருப்பாளோ
மனைவி ஓடிப் போயிருப்பாளோ
தொழில் நட்டமோ
சுற்றிய சொந்த துரோகமோ
கணநிமிடத்தில் கவலையாய்
ஆயிரம் சிந்தனை உள் ஓட
சட்டென நிமிர்ந்து
சட்டமாய் இளிக்கும் அவன்
சொல்லிக் கடக்கிறான்
காயமே இதுபொய்யடா
காற்றடைத்த பையடா என
பரிதவித்த எண்ணம்
பாதை திரும்புது
இவன்
சித்தனா ..பித்தனா
எப்படி இவனை
பைத்தியம் என்பது..????
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..