Wednesday 8 April 2015

குணநிறை குந்தவைபிராட்டியார்

செங்காந்தள் விழியாள்
செழுமைநிறை திமிராள்

சொல்வளமை மொழியாள்
செல்வகுண பண்பாள்

அதிமனஅழகாள்
அடக்கநிறை ஒயிலாள்
அறிவிற்சிறந்த மதியூகியாள்
அருள்மொழிவர்ம அன்புத்தமக்கையாள்

ஆயிரம்
அடைமொழி சிலையாய்
கல்கி கலைவடித்தாலும்

வான் நிறை திமிர்வீரன்
வல்லத்துராயன்

காதல் கனிவாகி
தோள் கொஞ்சும் கிளி எழிலிலேயே

ஒய்யாரச் செருக்காகிறாள்

எங்கள்
குணநிறை குந்தவைபிராட்டியார்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..