Friday 10 April 2015

கொலைகார ஆளுமை...

செம்மண் பூமியில்
செம்மரப் பழியேந்தி
செங்குருதி விட்ட
கோவலக் காளைகள்

எரிக்க கண்ணகி
இல்லாததாலே
கொழுத்து திரியுது
கொலைகார ஆளுமை...

இனம் பணம்
இட ஆதிக்கவெறி
அதிகாரமாடும்.... பிணக்கழுகு பதர்களே

பரந்தாடும் பூமியில்
விதைந்தாடும் அரக்க விருட்சங்களே

மனிதம் திண்ணும் ,,,உங்களின்
மனிதப் பசி
என்று தீருமோ ???

எந்த ஜென்மமெடுத்து
தீர்க்க போகிறீர்கள்
உங்கள் வம்சம் தொடர்ந்து பொசுக்கும்

எங்க தமிழ் மறத்தியின்
நெஞ்சுக்குலை எரியும்
கண்ணீர் சாபத்தை...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..