Saturday 14 March 2015

நற்கவி தோழமைக்கு... Yazhi Giridharan

நல்மன நட்பின்
நற்கவி தோழமைக்கு... Yazhi Giridharan

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஓருரி வரிகளில்
உற்சவதமிழ் காணும்
எழில் மொழி எளிமை வேந்தே

சொல்மொழிபொருளுணர
பொதிந்தகவி போற்றி பாடும் நீர்
பொய்யாமொழியோனின் வம்ச வாரிசோ

அனாமிகா..பூபாலன்...கனிமொழி..தனசக்தி
வைகறை...மற்றும் ப்ராங்க்ளின்...என.
கவி சூழ் கலைவாழ்வு வாழும்
செம்மொழிச்செழுமையே

அனைவரும் ஒன்று கூடின்
அன்று காணுமோ ..தமிழ் சங்கமம்
ஓர் மகா சிவராத்தியும்..சில தேநீர் கோப்பைகளும்

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின்
பெருமைமிகு அடையாளமே

என்றும் நீவீர்
வளமை இனிமையாய்....வாழும் தமிழாய்
செம்மை புகழோடு

வாழ்க....வாழிய நீர் பல்லாண்டு....

இனிய வாழ்த்துக்கள் தோழா...smile emoticon

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..