Saturday 14 March 2015

பெருமை மகத்துவமே போற்றி

பெண்மையெனும் பேரின்ப சக்தியாய் வந்த
பெருமை மகத்துவமே போற்றி

பாசம் அன்பு கனிவு நேசமெனும் மென்மைகள் தாங்கி
தளரும் நம்பிக்கைகள் காக்கும் தவ தியாக மேன்மையே போற்றி

அளப்பறியா தேவமாய் அவனி வந்து
கரு ஏந்தாமல் கருணை விழியேந்தி
அனைத்து உயிர்களையும் பிள்ளையென காத்து
துயர் களைய தவ வாழ்வு மேற்கொண்ட

ஸ்தூல பிரமமே....சூட்சம ஒளி அவதாரமே

உன் தொட்டு நானும் உன் இன மேன்மையாய் மண்ணில் பிறவியெடுக்க ...மாண்பு தந்த மா தவமே

மாதவர் தம் அடையாள ஆதூரமே

சரணம் சரணம் எங்கள் சாநித்திய தாய்மையே

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே...!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..