Monday 2 March 2015

சலங்கை சதிராடுகிறாய்

அழகு மயிலாய்
கோப கிளியாய்

சிணுங்கும் ஒயிலாய்
சிங்காரத் திமிராய்

நீள் வெண்டை விரல் நீட்டி
முத்துக்குஞ்சலம் முன் விழ

சலங்கை சதிராடுகிறாய்

அதட்டி மிரட்டி
கெஞ்சி மிஞ்சி
கொஞ்சலாடி

அபிநயிக்கும்
அங்க அசைவுகளில்

மாட்டி மயங்கித் தள்ளாடி
கிறக்க உலகம்
போகிறதடி

ஆளுமைநிமிர்
ஆன்ம பலம்...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..