Saturday 14 March 2015

என்னை மீறிய என் நேசம்

பொங்கி பொங்கி
சிரிக்கிறேன்
இணைந்தணைக்க
நீ அருகில்லையே

எனும்
ஏக்கம் இமைதட்டுகிறது

எச்சில் முழுங்கி
கன்னம் தட்டும்
கண்ணீர் விழுங்கும் வேளை

நீ வேண்டாம் அருகில்

எனக்காக கூட நீ
ஒருபோதும்
என் முன் கலங்க கூடாது

நிகழ்வாய் உடனிருக்கும்
நினைவாளுமையே

நீ
எப்போதும்
என்னை மீறிய

என் நேசம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..