என்னை மீறிய என் நேசம்
பொங்கி பொங்கி
சிரிக்கிறேன்
இணைந்தணைக்க
நீ அருகில்லையே
எனும்
ஏக்கம் இமைதட்டுகிறது
எச்சில் முழுங்கி
கன்னம் தட்டும்
கண்ணீர் விழுங்கும் வேளை
நீ வேண்டாம் அருகில்
எனக்காக கூட நீ
ஒருபோதும்
என் முன் கலங்க கூடாது
நிகழ்வாய் உடனிருக்கும்
நினைவாளுமையே
நீ
எப்போதும்
என்னை மீறிய
என் நேசம்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..