Monday 2 March 2015

வெற்றிக் கொடி கட்டட்டும்

விடிய விடிய விழித்து
விழித்த நொடிகள்
தொடுத்து சேமித்த
அறிவு புகுந்து புகுத்தி

எண்ணமெங்கும்
எழுத்துக்கள் ஓட
எழுதிய காகித பிரதி
கண்ணில் சுமந்து

உணவு மறந்து
உயிர் அணுவெங்கும்
கல்வி நிறைத்து

எதிர்காலம் தேடி
நன்நிலம் உழ ...
பேனா கலப்பையேந்தி
தேர்வெழுத ஆயுத்தமாகி

வரும் விதைநெல்
முளைப் பிரியங்களே

செழித்த திறமை
செம் பொன் அறுவடையாகி
சீர் மறவன் பசி நீக்கி
திமிர் நிமிர் நடை நீர் நடக்க

வருங்கால வெற்றி புகழ்
வாழ்வியல் நிம்மதியாய்
உங்களில் நிறைந்து

வளமை நடை போடட்டும்
வல்லரசு..உம் கனவுகளின் பாதையில்

மறுமலர்ச்சி சமுதாயம் தர
மெழுகென உழைப்புருகும்
பிஞ்சுப்பொன் தளிர்களே

விருட்சம் தாங்க வேரோடும்
விழுதுகளே

ஆசீர்வாத வாழ்த்து
பிரார்த்தனைகளுடன்

வெற்றிக் கொடி கட்டட்டும்
உம்
கருநிறை கல்விஆளுமை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..