Saturday 14 March 2015

உவமைச்சிரிப்பை உதடு ஒட்டி

நியாய
கோபம் திமிர்
வார்த்தை செயல்
தம் மன
தன்மான உணர்வுகளை

இயல்பின் வாழ்வில்
இயல்பாய்
பகிரமுடியா

சந்தோஷ முக்காடிட்ட
சதிப் பெண்மை

மகிழ்ச்சியாய்
கொண்டாடுகிறது

மகளிர் தினத்தை

வழக்கம் போல்

உள் குமுறும்
வேதனை மறைக்கும்
உவமைச்சிரிப்பை
உதடு ஒட்டி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..