Saturday 14 March 2015

பந்த பாச தாமரை தடாகத்தில்


எடுத்துக் கோர்க்கும்
உயிர்நூல் அறுந்த

பந்த பாச
தாமரை தடாகத்தில்

ஒட்டிய ஈரம்
கரு நிறைக்காமல்

விதியது விளையாட

எங்கோ ஓர்
எதிரெதிர் மூலையில்

அமைதியிழந்து
தவித்துக் கொண்டிருப்பார்கள்

எடுத்துக் கொஞ்ச
ஆளில்லா பிள்ளையும்

சுருங்கிய கருப்பை
விரிவடையா பெண்மையும்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..