Saturday 14 March 2015

வெற்றி விருட்சிபூ

பன்னிரு ஆண்டுகள்
பாடசுமையேந்தி

கையளவு மூளையை
கசக்கி பிழிந்து

கனிச்சுவை வாழ்வு
தீர்மானிக்கும் திருப்புமுனையில்

பயணதூரத்தை பரிட்சையாய்
பந்தயாமாட..
உணவு மறந்து ..உழுத கலப்பையேந்தி

தேர்வு பேனா முனை நிக்கும்
செழித்த செவ்வாழைக் குருத்துகளே

கண்ணுறக்கம் விழித்த
உங்கள் கல்வி கனவுகள் நனவாக
கலைமகள் கையோடு வந்து நடம்புரிய

வெற்றி விருட்சிபூ சூடுங்கள்
நாளை தாள்களின் தோள்களில்

செலுத்திய சாரதிகளும்
செவ்வனே உடன் விழித்து
உமைக் கருவோடு காத்தணைத்த பெற்றோரும்

உள்ளம் மகிழ பெருமை பருகட்டும்
உம் உழைப்பு அமுதத்தை

அன்னை ஆசீர்வாதங்களுடன்
ஆழ்மன வாழ்த்துக்கள் ....இளங்குருத்துகளே

வென்று ஓடிவாருங்கள் ..மாணாக்க மணிகளே

வரவேற்க காத்திருக்கிறது...உங்களை

ஓர்
ஒளிமயமான வருங்காலம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..