Monday 2 March 2015

புஷ்பாஞ்சலி*

திவ்விய ஒளிப் பிரியமாய் வந்த தேவ ஆளுமைகளுக்கு
பக்திநிறை மல்லிகை சமர்ப்பணம்

கனிவு நிறை செறிவாய் வந்த கருணைவேதங்களுக்கு
கனகாம்பரம் சமர்ப்பணம்

நல்மனமாற்றமும் நல்நிலை சிந்தையும் தந்து
கலக்கமுறும் மனதினை தெளிவுசூழ் நீரோடையாய்
உடனிருந்து செலுத்தும் உவகைநிறை தாய்மையே

நன்றியென பெருக்கெடுக்கும் விழிவழிய நின் திருமலரடிகளில்
என்றும் எம் பூம்மனம் சரணம் சரணம்..சமர்ப்பணம் அன்னையே....

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ....!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..