அதிகம் பசிக்கல
வம்படியா தின்னாலும் செமிக்கல
தளர்ந்த நடையா
தவங்கி போச்சு இராத் தூக்கம்
பாழாப் போன பல்லு போனதிலிந்து
பட்டுப் போச்சு சொல்லும்....
கட்டிய மவராசன் கட்டையில
போனபின் காக்காசுக்கு
பெத்த மகனும் மதிப்பதில்லை....
ஐம்புலனும் மங்கி
மறதி மனச தடவ
எதுக்கு இருக்குறோம்னு
தினம் நினைச்சாலும்
நெஞ்சுக்குழி பயம் கவ்வுது
நேத்து செத்தவள பார்த்தா..
போராடும் போதெல்லாம்
வாழ்ந்தாச்சு.......
நடபிணமான பின்ன
என்னத்துக்கு
நல்லது கெட்டது யோசனை
போற மட்டும் இழுத்துட்டு
போவட்டும் பொழப்பு நதி
என்றே பொலம்பி
தீரமிக்கிறாள்...
பேரிளங் குழந்தையான
தண்டட்டி தவசியாத்தா
வம்படியா தின்னாலும் செமிக்கல
தளர்ந்த நடையா
தவங்கி போச்சு இராத் தூக்கம்
பாழாப் போன பல்லு போனதிலிந்து
பட்டுப் போச்சு சொல்லும்....
கட்டிய மவராசன் கட்டையில
போனபின் காக்காசுக்கு
பெத்த மகனும் மதிப்பதில்லை....
ஐம்புலனும் மங்கி
மறதி மனச தடவ
எதுக்கு இருக்குறோம்னு
தினம் நினைச்சாலும்
நெஞ்சுக்குழி பயம் கவ்வுது
நேத்து செத்தவள பார்த்தா..
போராடும் போதெல்லாம்
வாழ்ந்தாச்சு.......
நடபிணமான பின்ன
என்னத்துக்கு
நல்லது கெட்டது யோசனை
போற மட்டும் இழுத்துட்டு
போவட்டும் பொழப்பு நதி
என்றே பொலம்பி
தீரமிக்கிறாள்...
பேரிளங் குழந்தையான
தண்டட்டி தவசியாத்தா
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..