Saturday 14 March 2015

பெண் தினம் 8

கடப்பாறை வேண்டாம்
கட்டுக் கட்டாய்
அகராதி வேண்டாம்

சிறகடிக்கும் ஓர் பட்டாம் பூச்சி
சில்லென்று அணைக்கும் சாரல்

இசைதாலாட்டதோள் சாய்த்த
நீள் இரவு வாகனப் பயணம்

ஓயாத பேச்சை ஒருநிமிடம்
உற்றுக் கவனிக்கும் பொறுமை

தன்மானம் தட்டி எழுப்பா சொல்லாடல்
வெட்கம் வரவழைக்கும்
பொய்மெய் கொஞ்சல் சீண்டல்கள்
எவரின் முன்னும்
விட்டுக்கொடுக்காத மதிப்பீடுகள்

இவை போதும்
அவளின்
மன ராஜ்ஜியம் ஆண்டு சிம்மாசனமிட

தேகம் போலவே
தேவமண மென்மையானவளே

எம் இன
மகிழம்பூ மங்கை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..