Saturday 14 March 2015

பெண் தினம் 7

தாலாட்டும் வயதில்
தாய் வேண்டும்
தாவியோடும் வயதில்
சகோதரி வேண்டும்

மீசை அரும்ப காதலி
ஆசை அணைக்க மனைவி

அதட்டி உருட்ட மகள்
என
எல்லோரும் அந்தந்த வயதில்
அன்பு நீரூற்ற வேண்டும்
ஆண்மை பயிருக்கு

ஆனால்
ஆடி ஓடி
கிழம் தட்டி
நரையோடி
மண்மூடும் வரை

எல்லாவயதிலும்
கட்டாயம் வேண்டும்..

உள்ளும் புறமும்
ஒளிவுமறைவில்லா

கண்ணாடி மனம் பகிர

ஆணிவேராய்
இமையணைக்கும்

கள்ளமில்லா

ஓர்
நேச சிநேகிதி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..